தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் அமைச்சர் புஸி ஆனந்த் பங்கேற்பு

310

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அவர்களின் மகன் பிரதாப் ராஜா அவர்களின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் புஸி ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான வணிகர்கள் உற்சாக வரவேற்புடன் மேடைக்கு அழைத்து வந்தனர்.

“வாழ்க!” என்ற முழக்கங்கள் விண்ணை முட்ட, கரவொலியுடன் மேடை நோக்கி அழைத்து வரப்பட்ட அமைச்சர் புஸி ஆனந்தை, மாநிலத் தலைவர் விக்கிரமராஜா மற்றும் பேரமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

மேடையேறிய அமைச்சர் புஸி ஆனந்த், மணமக்களை மனதார வாழ்த்தி, குடும்பத்தினருடன் அன்புடன் உரையாடினார். தொடர்ந்து மணமகன் பிரதாப் ராஜாவுடன் சில நிமிடங்கள் கலந்துரையாடிய அமைச்சர், தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.