ஐ , நோபடி’ ( I,NOBODY ) திரைப்படத்தின் திரை விமர்சனம்

15

கதைக் கரு :- வங்கி கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து கதை நகர்கின்றது.

மூன்று கொள்ளையர்கள் வங்கி ஒன்றில் கொள்ளை அடிக்கின்றனர். அந்த நேரத்தில் அந்த வங்கியில் இருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனின் முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்து செல்கின்றனர்.காவல் துறையினருக்கு உண்மையான கொள்ளையர்கள் யார் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்ய முடியவில்லை. காரணம் அவர்கள் விபத்து ஒன்றில் இறந்து போனார்கள் . அவர்கள் கொள்ளை அடித்த பணத்தினையாவது கைப்பற்றலாம் என நினைத்த காவல்துறையினருக்கு ஏமாற்றமே மிச்சம்.

 

அதே சமயம் ஊடகங்கள் அந்த சந்தேகத்திற்கு திரைக்கதை அமைத்து வெளியிடும் செய்திகள் மூலம் பிரித்வி ராஜ் சுகுமாரனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சிக்கல்கள் அடுக்கடுக்காக எழுகின்றன.

சிக்கல்கள் சிலந்தி வலை போல பின்னலிட இந்த சிக்கல்களில் இருந்து பிரித்விராஜ் சுகுமாரன் எப்படி மீண்டு வருகின்றார் ? அவர் குடும்பத்தினரும் எப்படி மீண்டு வருகின்றனர் ? வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு போனது ? அதனை தேடும் முயற்சியில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகள் என்ன ? அந்தப் பணம் யாரிடம் சிக்கியது ? என்ற கேள்விகளுக்கு விடை காண படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பதற்றத்தின் உச்சத்தில் கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கும் கதைக் களம் ‘ ஐநோபடி ‘
( I NOBODY )

வங்கிக் கொள்ளைக்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி காட்சிக்கு காட்சி அதிர வைப்பது நொடிக்கு நொடி திக்..திக்… திகில் என மிரள வைப்பது பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பவது படக்குழுவினரின் தனி சாமர்த்தியமே !