டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நடத்திய குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா! – திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது
திரையரங்க கேண்டீனில் தின்பண்டங்களை அதிக விலைக்கு விற்பதை கட்டுப்படுத்த வேண்டும் – முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த இயக்குநர் பேரரசு
சினிமா போல் சிறந்த தொழில் எதுவும் இல்லை – டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு
குறும்படங்கள் எடுப்பது சாதாரண விசயம் இல்லை – டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் ஆர்.கே.செல்வமணி பேச்சு
துஷாந் தன் பிறந்தநாளை குறும்பட தினமாக கொண்டா வேண்டும் – டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் இயக்குநர் சுப்பிரமணிய சிவா வலியுறுத்தல்
குறும்பட இயக்குநர்களின் முன்னோடி, குரு என்றால் அது ஆர்.கே.செல்வமணி சார் தான் – டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு
தயாரிப்பாளர் சங்கமும், பெப்ஸியும் இணைந்து பல நல்ல திட்டங்களை உருவாக்கி வருகிறது – டன்ஸ்டன் குறும்பட போட்டி விழாவில் ஜி.கே.எம். தமிழ் குமரன் தகவல்
டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான துஷாந் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினார். சுமார் 500-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்ற இதில், சிறந்த 10 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் மூன்று பேருக்கு முதல் மூன்று பரிசு மற்றும் காசோலை வழங்கப்பட்டது. மேலும், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
குறும்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மற்றும் சிறப்பு பிரிவில் தேர்வு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ், நினைவு பரிசு, பதக்கம் ஆகியவை வழங்கி கெளரவிக்கப்பட்டது.