பக்ரீத் திருநாளை முன்னிட்டு முத்தமிழ் சங்கம் நடத்திய குருதி கொடை விழா!
உங்கள் ஒருவரின் இரத்தம்… ஒருவருக்கு வாழ்கை தரும் என்கிற உயரிய நோக்கில் ,Baraak K R Group திரு.கண்ணன்ரவி அவர்களின் மாபெரும் ஆதரவில்
மனிதத்துவம் மற்றும் தமிழரின் பெருமை நிறைந்த நிகழ்வான ரத்த தான நிகழ்வு நேற்று நடைபெற்றது.
ஒரு சொட்டு இரத்தம் – ஒரு புதிய உயிரை உருவாக்கும் என்கிற அடிப்படையில் ரத்த தான நிகழ்வை முத்தமிழ் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது.
முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் திரு.ராமசந்திரன்மற்றும் தலைவர் திரு ஷா அவர்களின் மேற்பார்வையில் ,பொது செயலாளர் திரு.சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பான வகையில் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
சிறப்பு விருந்தினராக திரு பாலஸ்கந்தன், சந்திரசேகரன் , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அபுதாபி முத்தமிழ் சங்கத் தலைவர் திரு மணியரசு ,
ஹிர்சாத்,,விக்னேஷ், யுக மூர்த்தி, விஜய், காரல் மார்க்ஸ் டயானா மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரத்தம் தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பராக் உணவகத்திலிருந்து பிரியாணி வழங்கப்பட்டது ரத்ததானம் செய்தவர்களுக்கு முத்தமிழ் சங்கத்தின் சக்கரவர்த்தி ஊட்டச்சத்து மிகுந்த பழங்களை கொடுத்து கௌரவித்தார் மருத்துவமனை தொடர்பான ஒருங்கிணைப்பினை முத்தமிழ் சங்கத்தின் தங்கதுரை ஏற்பாடு செய்திருந்தார் வந்திருந்த ரத்ததான கொடையாளிகளுக்கு ரத்ததானம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் அனைவரும் இதில் பங்கெடுக்குமாறு முத்தமர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது
Pictures: Value Media Middle East UAE
Subash chandra bose Rajavelan
Value Media Middle East -Managing Editor