Naangal Movie Review
'நாங்கல்' என்பது ஏப்ரல் 18, 2025 அன்று வெளியாகும் ஒரு தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தை
 அவினாஷ் பிரகாஷ் இயக்கியுள்ளார், மேலும் அப்துல் ரஃபே, மிதுன் வி, ரித்திக் மோகன் 
மற்றும் நிதின் டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 நாங்கலுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிற பிரபல நடிகர்கள் பிரார்த்தனா ஸ்ரீகாந்த் 
மற்றும் சப் ஜான் எடத்தட்டில்.

நாங்கள் படத்தின் கதை 1990களில், ஊட்டியில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 
ஊட்டியில் வசித்து வரும், ராஜ்குமார் (அப்துல் ரஃபே), பத்மா (பிரார்த்தனா ஶ்ரீகாந்த்) 
பிரிந்து வாழும் தம்பதியினர். இவர்களின் குழந்தைகளான கார்த்திக் (மிதுன் வி),
 துருவ் (ரித்திக் எம்), கௌதம் ( நிதின் டி) ஆகிய மூவரும்,  மிகவும் கண்டிப்பான
 அப்பாவின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களின் தோழனாக கேத்தி (ராக்ஸி) 
எனும் நாயும் இருந்து வருகிறது. ஊட்டியில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வரும், சிறிய
 அளவில் விவசாயம் செய்து வரும் ராஜ்குமார் கரண்ட் பில் கட்ட முடியாத, ஆசிரியர்களுக்கு 
சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலைக்கு அவர் வர காரணம் 
என்ன? தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதை மூன்று சிறுவர்களின்
 உணர்ச்சிப் போராட்டத்தை, உணர்வுபூர்வமாக சொல்வது தான், நாங்கள் படத்தின் கதை,
 திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
Comments (0)
Add Comment