மவுண்ட் ரோடு புஹாரி இப்போ துபாய் காரமாவில்

புஹாரி பிரியாணி இப்போ துபாயில் -உரிமையாளர் இர்ஃபான் புஹாரி அறிவிப்பு

சென்னை‌ மக்களின் உணவக விருப்பத்தில் இரண்டற கலந்த புஹாரி ஹோட்டல் துபாயில் கராமாவில் கால் பதித்து உள்ளது.

மவுண்ட் ரோடு புஹாரி ‌1951 ஆம் ஆண்டு முதல் உணவு பிரியர்களின் குறிப்பாக பிரியாணி பிரியர்களின் முதன்மையான தேர்வாக இன்று வரை இருந்து வருகிறது.

சிக்கன் 65என்னும் உணவு ரகத்தை அறிமுகம் செய்த புஹாரி ஹோட்டல் இன்று அந்த பெயருக்கு மட்டுமில்லமால் பல சுவையான உணவை வழங்கி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது..

மூன்றாவது தலைமுறையாய் புகாரி ஹோட்டல் நீடித்தது வருவதற்கு காரணம் உணவை சமைப்பத்தில் தரத்தை எள்ளளவும் குறைத்தது இல்லை.

, புஹாரி உணவகங்களின் பெருமைக்குரிய உரிமையாளர் இர்பான் புஹாரி துபாயில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

புஹாரி உணவகங்கள் 1920களில் இலங்கையின் கொழும்பில் வெளிநாட்டினருக்கு உணவளிக்கும் கஃபேவாக தனது பயணத்தைத் தொடங்கி,0

“அண்ணாசாலை மவுண்ட் ரோட்டில் உள்ள எங்களது முதல் புகாரி ஹோட்டல், 1951 ஆம் ஆண்டு முதல் அதன் அசல் இடத்திலேயே தற்போதும் செழித்து வருவதாக கூறினார்.

 

.சுதந்திரத்திற்குப் பின்பு மெட்ராஸில் திறக்கப்பட்ட முதல் உணவகம் இதுவாகும். எஸ்பிரெசோ மெஷின்கள் ஆவியில் வேகவைக்கும் காபி, ஜூக்பாக்ஸ், சமகால டியூன்களை இசைக்கும், மற்றும் லண்டனில் இருந்து நேர்த்தியான கட்லரிகள் மற்றும் கிராக்கரிகள், இவை அனைத்தும் மெட்ராஸின் உணவு ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான சிறந்த உணவு அளித்து வந்ததை குறிப்பிட்டார்.

 

தன்னுடைய பாட்டானார்.ஏ.எம். புஹாரி கொழும்பில் இருந்து லேசான மசாலா, நறுமணப் பிரியாணியைக் கொண்டு வந்தார். குங்குமப்பூ கலந்த அரிசியில் நன்கு வேகவைக்கப்பட்ட முட்டை முதல் பிரபலமான சிக்கன் 65 வரை – அது உருவாக்கப்பட்ட ஆண்டின் பெயரிடப்பட்டது-

 

அவர் உணவகத் துறையில் தன்னை வேறுபடுத்திக் கொண்ட புஹாரி என்ற பிராண்ட், இப்போது நகரத்தில் பிரியாணிக்கு ஒத்ததாக உள்ளது. இது திரு. புகாரியின் 200க்கும் மேற்பட்ட வெவ்வேறு கலவைகளைக் கொண்ட பரிசோதனையின் மூலம் உருவானது என்றார்.

இன்று, இந்தியா முழுவதும் 40 உணவகங்களை நடத்துவதில் பெருமை கொள்வதாக தெரிவித்த அவர்

சமையல் கனவுகள் உயிர்ப்பிக்கும் எங்கள் சமீபத்திய உணவகத்தின் பிரமாண்ட திறப்பை துபாயில் நாளை முதல் (18அக்டோபர் )திறக்கப்பட உள்ளது என்றார்.

 

துபாயில் உள்ள அல் கராமாவின் இதயத்தில் அமைந்துள்ள நாங்கள், உணவு பிரியர்களுக்கும், தனித்துவமான சாப்பாட்டு அனுபவங்களைத் தேடுபவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான இடமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறிய அவர் தரமான சுவையான பிரியாணி‌மற்றும் உணவுகள் கிடைக்கும் என்றார்..

சமஹோச பன் பட்டர்‌ஜாம் டீ ‌மற்றும் மனம் கவர்ந்த உணவுகள் அனைத்தும் கிடைக்கும் என்றார்.

al karma buhariirfanbuhariMount road buhari
Comments (0)
Add Comment