தீவிர சிகிச்சைக்கான மற்றும் சிறப்பு மருத்துவ மருந்துகளை நேரடியாக நோயாளிகளுக்கு வழங்கும் இந்த தளம், தனது உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதுடன், குளிர்சாதன விநியோகச் சங்கிலி வசதிகளை மேம்படுத்தி, இந்தியா முழுவதும் தனது மருத்துவச் சேவைகளை பரவலாக்குகிறது.
சென்னை, இந்தியா | 4 பிப்ரவரி 2025: தீவிர சிகிச்சைக்கான மற்றும் சிறப்பு மருத்துவ மருந்துகளை வழங்கும் முன்னணி தளமான மிஸ்டர்மெட் (MrMed), தனது உட்கட்டமைப்பு விரிவாக்கம், மேம்படுத்தப்பட்ட குளிர்சாதன வினியோக வசதிகள் மற்றும் தேசிய அளவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம் தனது அடுத்தகட்ட வளர்ச்சி விரைவுபடுத்துவதை பெருமிதத்துடன் இன்று அறிவித்துள்ளது.
உயிர் காக்கும் மற்றும் உகந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு மருந்துகள் சரியான நேரத்தில் கிடைப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சென்னை, டெல்லி மற்றும் பெங்களூருவைத் தொடர்ந்து தற்போது கௌஹாத்தியிலும் தனது நேரடி வினியோகச் செயல்பாடுகளை மிஸ்டர்மெட் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் மருந்துகளை விரைவாகவும் எளிதாகவும் கொண்டு சேர்ப்பதே இந்த விரிவாக்கத்தின் நோக்கமாகும்.
தனது உள்கட்டமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, பெங்களூருவில் புதிய குளிர்சாதன சேமிப்புக் கிடங்கை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இது கர்நாடகா மாநிலம் மற்றும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கு மருந்துகளை விரைவாக விநியோகிக்க உதவும் ஒரு முக்கிய மையமாகச் செயல்படும். அதே வேளையில், சென்னை மாநகரமானது, தொடர்ந்து மிஸ்டர்மெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு மையமாகவும், மருந்தக மையமாகவும் விளங்கும்.
மிஸ்டர்மெட் நிறுவனம் இந்தியா முழுவதும் மேலும் பல நகரங்களில் தனது உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய (Temperature-sensitive) மருந்துகளை, நோயாளிகளின் இருப்பிடத்திற்கே நேரடியாகக் கொண்டு சேர்க்கும் ‘லாஸ்ட்-மைல் டெலிவரி’ சேவையை வலுப்படுத்துவதில் இந்நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
“தீவிர சிகிச்சைக்கான மருந்துகள் கிடைப்பது என்பது, ஒரு நோயாளி வசிக்கும் இடத்தைப் பொறுத்து அமையக்கூடாது,” என்று மிஸ்டர்மெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. தேவாஷிஷ் சிங் கூறினார். “சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளை அனைவரும் எளிதாகப் பெறும் வகையில், நம்பகமான மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம், பெரிய மாநகர மருத்துவமனைகளுக்கு வெளியே பிற சிறு நகரங்களில் உள்ள நோயாளிகளும் எவ்விதத் தடங்கலும் இன்றி தங்களது சிறப்பு மருந்துகளைப் பெற்று, சிகிச்சையைத் தொடர்வதை நாங்கள் உறுதி செய்கிறோம்..” என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், மிஸ்டர்மெட் நிறுவனம் இதர சிறப்பு மருத்துவச் சேவைகளிலும் கால்பதிப்பதன் மூலம் சுகாதாரக் கட்டமைப்பில் தனது பங்கை விரிவுபடுத்துகிறது. இதில் செவிலியர் மூலம் வீட்டிலேயே வழங்கப்படும் மருந்தளிப்பு மற்றும் கீமோதெரபிக்கு முன்னும் பின்னும் தேவைப்படும் ஆதரவுச் சேவைகள் போன்ற புற்றுநோய் சிகிச்சை முறைகளும் அடங்கும். நீண்ட கால சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதைக் குறைப்பதும், தடையற்ற சிகிச்சையை வீட்டிலேயே தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதும் இத்திட்டங்களின் நோக்கமாகும்.
“சிறப்பு மருந்துகளை வழங்குவது எங்களது முதன்மைப் பணியாக இருந்தாலும், மருந்துகளைத் தாண்டி நோயாளிகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்கிறோம்,” என்று மிஸ்டர்மெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சௌரப் ஜெயின் கூறினார். “புற்றுநோய் சிகிச்சை போன்ற நீண்ட கால சிகிச்சைகளுக்கு நோயாளியின் வீட்டிலேயே தகுந்த கவனிப்பு தேவைப்படுகிறது. இத்தகைய சிறப்புச் சேவைகளைத் தொடங்குவதன் மூலம், செவிலியர்கள் உதவியுடன் மருந்தூசி செலுத்துதல் மற்றும் கீமோதெரபி ஆதரவுச் சேவைகளை எங்களால் வழங்க முடியும். இது நோயாளிகள் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் சிரமத்தைக் குறைக்க உதவும்,” என்றும் அவர் தெரிவித்தார். “
புற்றுநோய் சிகிச்சையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இயங்கும் பிற தளங்களைப் போலன்றி, மிஸ்டர்மெட் புற்றுநோய், ஹெச்ஐவி, ஹெபடைடிஸ், அரிய வகை நோய்கள் மற்றும் பிற சிக்கலான பாதிப்புகளுக்கான மருந்துகள் உட்பட, சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மற்றும் தீவிர சிகிச்சைக்கான பரந்த அளவிலான மருத்துவச் சேவைகளை வழங்குகிறது. அதிக விலை, ஒழுங்குமுறை விதிமுறைகள் மற்றும் குளிர்சாதனப் பாதுகாப்பு தேவைகள் காரணமாக இத்தகைய மருந்துகள் பொதுவாக அக்கம் பக்கத்தில் உள்ள மருந்தகங்களில் வழக்கமாக இருப்பு வைக்கப்படுவதில்லை.
மிஸ்டர்மெட் நிறுவனம் எலி லில்லி (Eli Lilly), நோவோ நார்டிஸ்க், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் மேன்கைண்ட் உள்ளிட்ட முன்னணி சர்வதேச மற்றும் இந்திய மருந்து நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் முறையான ஆதாரங்கள் வழியாகவும், நம்பகமான முறையிலும் கிடைப்பதை இந்நிறுவனம் உறுதி செய்கிறது.