உங்கள் ஒருவரின் இரத்தம்… மற்றவருக்கு வாழ்கை தரும் என்கிற உயரிய நோக்கில் ,Baraak K R Group திரு.கண்ணன்
ஒரு சொட்டு இரத்தம் – ஒரு புதிய உயிரை உருவாக்கும் என்றால் அது மிகையாகாது
இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் – உயிர்கள் பெருக்கும் இந்த செயல் உங்களின் மனிதநேயம் வெளிப்படுத்த கூடிய சிறந்த தருணம் என்று துபாய் முத்தமிழ் சங்கம் தெரிவித்துள்ளது. முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் திரு.ராமசந்திரன் மற்றும் தலைவர் ஷா ,நிர்வாகிகள் ரத்த தான அறிவிப்பை வெளியிட்டு நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
🗓 தேதி: 07-06-2025, சனிக்கிழமை
🕰 நேரம்: காலை 8.30 முதல் 12 மணி வரை
📍 இடம்: DHA Dubai,
Al Wasl Hospital, Oud Metha, Jeddaf, Dubai – UAE
📌 தங்கள் பெயரை பதிவு செய்ய:
📞 056 969 7475
📞 052 656 0559
📞 056 810 3994
🎁 பதிவு செய்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் Baraak Hotel Dubai- Biryani உணவு மற்றும் பழரசம் வழங்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.
உயிர் காக்கும் தமிழராய் நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பை பெற நினைபவர்கள்உடனே பதிவுசெய்து, உயிர்களுக்கு ஒளியாகுங்கள்!
ரத்த தான முக்கியத்துவம்:
இரத்ததானம் என்பது ஒருவரின் உயிரை காப்பாற்றும் ஒரு புனித செயலாகும். ஒவ்வொரு நொடிக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு இரத்தம் தேவைப்படுகின்றது. மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், விபத்துகள் மற்றும் சில கடுமையான நோய்களுக்குப் பாதிக்கப்பட்டவர்கள், என்று அடுக்கி கொண்டே போகலாம்.
தங்கம் போன்று மதிப்புடைய இந்த “இரத்தத்திற்கான” தேவைமிக்க முயற்சியில் நம்மை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் தொடர்ந்து கேட்டு கொண்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே
இரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.:
ஒருவர் கொடுக்கும் ஒரு யூனிட் (unit) இரத்தம் மூன்று பேரின் உயிரை காப்பாற்ற உதவுகிறது
இரத்ததானம் செய்வதன் மூலம் உடலின் தன்னிலையானது மேம்படுகிறது.
நம் உடலில் புதிய இரத்த உறுப்பு உருவாகும் .அதோடு மட்டுமில்லாம ஆல்
இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
🩸 யார் யார் இரத்ததானம் செய்யலாம்?
18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்தம் தானம் மேற்கொள்ளலாம்.
ரத்த தானம் செய்பவர்கள் குறைந்தது 50 கிலோ எடை இருத்தல் அவசியம்.
கடைசியாக இரத்ததானம் செய்து 3 மாதம் இடைவெளி இருக்க வேண்டும். பிறகு மீண்டும் செய்யலாம்
❤️ சமூகப் பங்களிப்பு:
இரத்ததானம் என்பது மாபெரும் மனிதநேய பணி. அதோடு மட்டுமில்லாமல் நாம் ஒருவருக்கொரு உயிரைக் கொடுக்கும் வாய்ப்பு அளிக்கிறோம் முகத்தான செய்தி அல்லவா…இத்தகைய நிகழவுகள் சமூகத்தில் பாசமும், நல்லெண்ணங்களும் வளர்க்க உதவும் காரணிகள் என்பதை உண்ணுதல் வேண்டும்.
இரத்ததானம் செய்த பின் செய்ய வேண்டிய விஷயங்கள்:
சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்.
சத்தான உணவு நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்
#சுபாஷ்சந்திரபோஸ்ராஜவேலன்
ValueMediaMiddleeast -Managing Editor
.