“24‌மணிநேரம்” உழைக்க முன்வருபவர்களே நீண்ட காலத்திற்கு முதலாளியாக நீடிக்க முடியும்

Global kids abacus" நிறுவனர் தியா சுபபிரியா உரை

தொழில் என்பது எட்டு மணி நேர வேலையில்லை..வாரத்தின் ஏழு நாட்களும் 24‌மணிநேரம் உழைக்க வேண்டும் தியா சுப பிரியா இளைஞர்களுக்கு அறிவுரை

 

 

முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் திரு.ராமசந்திரன்மற்றும் தலைவர் திரு ஷா அவர்களின் மேற்பார்வையில் ,பொது செயலாளர் திரு.சுரேஷ்குமார் தலைமையில் துபாய் கராமா வில் வர்த்தக சந்திப்பு நடைபெற்றது.

 

சிறப்பு விருந்தினராக திருமதி.தியா சுப பிரியா,திரு.சுதாகர் ராவ் ,திரு பாலஸ்கந்தன், சந்திரசேகரன் , கிஸ்ஸிங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

 

 

நிகழ்வில் உரையாற்றிய தியா சுப பிரியா ,தொழி முனனைவோர்களாக வருபவர்கள் வர நினைப்பவர்கள் வெறும் கனவையும் லாபத்தை மனதில் வைத்து இறங்க கூடாது..அப்படி இறங்கினால் அந்த தொழில் நீண்ட காலம் நிலைக்காது..

16 வயதில் திருமணம் செய்து வைத்தாலும் குடும்ப சுவர்களுக்கு உள்ளே  வாழ்ந்த நான், பின்னர் குடும்பத்தினர் தந்த பெரும் ஆதரவு வணிகத்தில் என்னை ஈடுபட வைத்தது என்றார்

 

சிறிய வயதில் திருமணம் இவற்றால் வாழ்வில் இள வயது ஆசைகள் இல்லாமால் போனது ஒரு பக்கம் இருந்தாலும் என்னுடைய பலம் குடும்பத்தை கவனிப்பது மட்டுமல்ல தனியாக சொந்த காலில் நிற்பதை உணர்ந்தேன்.

பிறகு பல பட்டங்களை  முடித்து தற்போது தொழில் முனைவராக, வழக்கறிஞராக பணியாற்றுகிறேன்..

 

தொழில் முனைவோர்கள் தங்களின் வணிகத்தை  ரத்தமும் சதையுமாக எண்ணி செயல்பட்டால் வெற்றி பெறுவது நிச்சயம். என்றார்..இதயத்தோடு ஒன்றி செயலாற்ற வேண்டும்.

துபாய் ஏற்று மதி இறக்குமதி டிரேடிங்  நிறுவனத்தின் தலைமையேற்று நடத்தி வரும் தியாசுப பிரியா ,
சென்னை ,பெங்களுர் ,அருப்புகோட்டை உள்ளிட்ட நாற்பது இடங்களில் abacus நிறுவனத்தை நடத்தி வருகிறார் ..

#Global kidsAbacus “பயிற்சி மையங்களை துபாய், அபுதாபி மற்றும் சார்ஜா விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

#Dhiya subapriya Globalkidsabacus #nba24×7
#valuemediamiddleeast

#Globalkidsabacus#dhiyasubapriya#valuemediamiddleeast
Comments (0)
Add Comment