*காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.
*நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் ‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் கிட்டி*
*வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை நெஞ்சம் கவரும் கிட்டி*
ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ்
பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் கிட்டி.
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல தமிழ் சினிமாவில் பரபரப்பான திரைக்கதை உள்ள திரைப்படங்கள் வருவது வெகு கடினம் ஆகிவிட்டது.
ஒரு சில கமர்சியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கும் ஒரு விறுவிறு திரைக்கதை அம்சம் உள்ள படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை நிச்சயமாக மனதிற்குள் தோன்றும் .
அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விறுவிறு திரை கதையுடன் பரபர கதைகளைத்துடன் வரப் போகும் படம் தான் கிட்டி.
நாட்டில் நம்மை சுற்றி எவ்வளவு குற்றங்கள் நடந்தாலும் யார் செய்தார்கள் என்ற விசாரணை செய்வதுதான் ரெகுலர் ஃபார்முலா திரைக்கதையாக தமிழ் சினிமாவில் உள்ளது.
அதை மாற்றி கதை நாயகனை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இந்த திரைக்கதையால் நிச்சயம் படம் வெளியான பிறகு நிமிர்ந்து நிற்பார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ்.
படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் இயக்குனர் மிகுந்த சிரமம் எடுத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த கதாபாத்திரங்களில்
இவர்கள்தான் நடிக்க வேண்டும் என்று நடிகர் தேர்வில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டிருப்பது குறிப்பிட்டதக்கது.
மேலும் நாயகன் அசோக் மனநோயாளியாக நடிக்கும் அந்த கதாபாத்திரத்தை இயக்குனர் சொல்லிக் கொடுத்த விதமும் நாயகன் நடித்த விதமும் படத்தில் அருமையாக இருக்கும் என்று இயக்குனர் கூறியது மறக்க முடியாத நிகழ்வு.
மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ‘முருகா’ அசோக்கிற்கு இப்படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை .
மேலும் இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக நிச்சயம் வலம் வருவார்.
முருகா அசோக்கிற்கு இப்படத்தில் மூன்று நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிஷா,சங்கவி,
சிமு அத்வானி ஆகிய மூன்று நாயகிகள் உடன், ‘ஊமை விழிகள்’ பட இயக்குனர் ஆர். அரவிந்த்ராஜ் படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகர் ஒய் ஜி மகேந்திரன் சிறப்பு தோற்றத்திலும் .
தயாரிப்பாளர் திருமாறன் விசாரணை அதிகாரியாக வரும் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், கடலூர், தரங்கம்பாடி, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது.
படத்தின் தொழில்நுட்பக் குழு விபரம்.
இசை – காதர்
ஒளிப்பதிவு -வி.எஸ்.வேலன்
நடனம் – ராக் சங்கர்
எடிட்டர் – கார்த்திக் பாண்டியன்
ஸ்டண்ட் – ‘பாப்புலர்’ பாபு
பாடல்கள் – ப்ரியன், சீர்காழி சிற்பி,
தமிழ்மகன்
கலை இயக்குனர் – வாலி
மக்கள் தொடர்பு – சரண்
கதை,திரைக்கதை ,வசனம், இயக்கம் – நெடுமாறன் மோகன்தாஸ்.
ரியா கிரியேஷன்ஸ் சார்பாக திருமாறன் படத்தை தயாரித்திருக்கிறார் .
இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.