ஆட்டிசம் மற்றும் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கு நடிகர் லெஜன்ட் சரவணன் நிதியுதவி வழங்கினார்!

21

நடிகர் பாவா லட்சுமணனுக்கு ₹2,00,000/- மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கியதை தொடர்ந்து , இன்று திருவள்ளூர் மாவட்டம் பூதூர் கிராமத்தில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, நடிகர் லெஜன்ட் சரவணன் தனது ரசிகர் மன்றம் சார்பில் ₹50,000/- மற்றும் மளிகை பொருட்களை நடிகர் கூல் சுரேஷ் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் ஆகியோர் மூலம் வழங்கினார்.

இயலாதவர்களுக்கு உதவுவதை, தனது உயிர்மூச்சாக கொண்டுள்ள நடிகர் லெஜன்ட் சரவணன், பார்வை அற்றோருக்கு பார்வையாக இருக்கிறார்!