திரைப்பட இயக்குநர் மற்றும் கவிஞர் பிருந்தா சாரதி எழுதிய “தொட்டனைத்தூறும் மணற்கேணி” கவிதை நூல் வெளியீட்டு விழா, 08.03.2026 இன்று மாலை சென்னை மியூசிக் அகாடமி சிற்றரங்கில் நடைபெற்றது.

153

இயக்குநர் லிங்குசாமி நூலை வெளியிட, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மற்றும் இயக்குநர் வசந்த பாலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் ஐ.நா. அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. கண்ணன், ஊடகவியலாளர் கார்த்திகேயன், சூழலியல் எழுத்தாளர் கோ. லீலா, பத்திரிகையாளர் மானா பாஸ்கரன், மொழிபெயர்ப்பாளர் பிரேமா ரவிச்சந்திரன், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் ஜின்ன அஸ்மி, டிஸ்கவரி பப்ளிகேஷன் மு. வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.